தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற கோரிக்கை

ஓமலூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

சேலம் மாவட்டம் புளியம்பட்டி மேம்பால பகுதியில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த மேம்பாலம் வழியாக பெங்களூரு மற்றும் மேட்டூர், மைசூர் நகரங்களுக்கு வாகனங்கள் பிரிந்து செல்லும். இந்தநிலையில் மேம்பாலம் ஓரத்தில் கோழி, ஆடு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சிலர் கொட்டி, தீ வைப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் துர்நாற்றம் மற்றும் புகையினால், மூச்சு திணறல் பாதிப்புக்கு ஆளாகின்றன. தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற, சேலம் மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Exit mobile version