வண்ணபூரணி சுற்றுலா திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

சத்தியமங்கலத்தில் வண்ணபூரணி வன சுற்றுலா திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு பயணிகளை அழைத்துச் செல்வதற்காக வண்ணபூரணி வனசுற்றுலா திட்டம் 2017 ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. புலிகள் காப்பகத்திற்குள் வேன் மற்றும் ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் வார இறுதி நாட்களில் பயணிகளை அழைத்துச் சென்று வனப்பகுதி சுற்றிக் காட்டப்பட்டு வந்தது. இந்தநிலையில், கடும் வறட்சி காரணமாக இந்த சுற்றுலா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கோடை மழை பெய்து வனப் பகுதிகளில் குளிர் நிலவுவதலும், கோடை விடுமுறை என்பதாலும் மீண்டும் வண்ணப்பூரணி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version