அழிந்து வரும் நாட்டு மாடு இனங்களை பாதுகாக்க கோரிக்கை

அழிந்து வரும் நாட்டு மாடுகள் இனங்களை பாதுகாக்க வேண்டும் என நாட்டு மாடு வளர்த்து வரும் சங்கீதா அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் அரியவகை மாட்டு இனங்கள் வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் மாடுகளை தங்களது குடும்ப உறுப்பினர்களாகவும், அரிய வகை மாடுகளை பாதுகாத்திடவும், மாடுகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க செய்யவும் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

நாட்டு மாடுகளை சமூக ஆர்வலர்கள் சிலர் தங்களது குடும்ப உறுப்பினர்களை போன்று வளர்த்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் சங்கீதா எனபவர், நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறார். மாடுகளை வளர்ப்பது குறித்த விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்தி வருகிறார்.

Exit mobile version