சீரமைக்கப்பட்ட மின்வாரிய அலுவலகத்தை திறக்க கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சீரமைக்கப்பட்ட மின்வாரிய அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மையப்பகுதியில் இருக்கும் மின்சார வாரிய அலுவலகம் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு சேதமடைந்ததால் மூடப்பட்டது. இந்நிலையில் மின்சார வாரிய கட்டடம் சீரமைக்கப்பட்டு 6 மாத காலம் ஆகியும் திறக்கபடவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்துவதற்கு 3 கிலோ மீட்டர் தூரம் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நகர் பகுதியில் இருக்கும் சீரமைக்கபட்ட மின்சார வாரிய அலுவலக கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version