குழந்தை தத்தெடுப்பில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்த கோரிக்கை

குழந்தை தத்தெடுப்பில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா கூறியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் சரோஜா தலைமையில் நடைபெற்றது. அரசு அதிகாரிகள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சரோஜா, குழந்தைகளை தத்தெடுக்கும் முறையில் உள்ள கட்டுபாடுகளை தளர்த்த வேண்டும் என கோரிக்கை வந்துள்ளதாக கூறினார். இது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.

Exit mobile version