வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க முதலமைச்சரிடம் கோரிக்கை

வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்துள்ளார்.

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் 8 புதிய பேருந்துகளை வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட ஆட்சியர் ராமன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வேலூரை 2 மாவட்டமாக பிரிக்க ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளதாகவும் வேலூரை அரக்கோணம், வேலூர், திருப்பத்தூர் என 3 மாவட்டமாக பிரித்தால் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியுள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து பரிசீலித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், அதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

Exit mobile version