பாஜக வெற்றி குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து

புதிய இந்தியாவை கட்டமைக்க பிரதமர் மோடிக்கு நாட்டு மக்கள் அழைப்பு விடுத்துள்ளதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி குறித்து பேசிய குடியரசு தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட வெளிநாட்டுத் தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருந்தளித்தார். இந்தநிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா, வறுமை இல்லாத நாடாக மாற வேண்டும் எனவும் இங்கு, ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சியானது, நமது கலாசார வளத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் இருக்க வேண்டும் என கூறியுள்ள அவர், மக்களின் விருப்பங்களையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்காக, பிரதமர் மோடியின் தலைமைக்கு நாட்டு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version