தசரா விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து

தசரா விழாவையொட்டி நாட்டு மக்களுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று தசரா விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், நாட்டு மக்களுக்குத் தசரா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தீமைக்கு எதிராக நன்மை வெற்றி பெற்றதன் அடையாளமாக இந்தக் கொண்டாட்டம் திகழ்வதாகவும். நேர்மையாகவும் உண்மையாகவும் வாழ வேண்டும் என்ற உறுதியை இது ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நாள் நாட்டு மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் உண்டாக்கும் நாளாக அமையட்டும் எனவும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version