நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்த குடியரசு தலைவர் திரெளபதி முர்மு!

நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்த திரவுபதி முர்மு, பல்வேறு விதமான மொழிகள், மதங்கள் நம்மை பிளவுபடுத்தாமல் ஒன்றிணைத்துள்ளது என பெருமிதம் தெரிவித்தார். மேலும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவை வெறும் கோஷங்கள் அல்லாமல் சமீப ஆண்டுகளில் இந்த லட்சியங்களில் நாம் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம் என கூறினார். நாளைய இந்தியாவை வடிவமைக்க பெண்களே அதிக பங்களிப்பை வழங்குவார்கள் என குடியரசு தின உரையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்தார்.

Exit mobile version