குடியரசு தின விழாவையொட்டி சென்னையில் பாதுகாப்பு தீவிரம்

குடியரசு தினவிழாவையொட்டி சென்னை மெரினாவில் நாளை 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் குடியரசு தினவிழாவையொட்டி மெரினா, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர். அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள பகுதிகளில் கடலோர பாதுகாப்புப் படையினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version