குடியரசு தின கொண்டாட்டம் : நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை பகுதியில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தின விழா, நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில், ராஜபாதை முதல், செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும், 25 ஆயிரம் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல் சென்னையில் குடியரசு தின விழா நடைபெறும் மெரினா மற்றும் காமராஜர் சாலை முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version