மெரினா கடற்கரைசாலையில் குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி

70வது குடியரசு தின விழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரைசாலையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டின் 70வது குடியரசு தின விழா வரும் 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். இந்த நிலையில் குடியரசு தின விழாவின் முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி இன்று மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு நடைபெற்றது.

இதில் முப்படை அதிகாரிகள், தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவர்கள், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள மாணவர்கள் கலந்து கொண்டு முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முப்படை அதிகாரிகள் அணி வகுப்பு மரியாதை செலுத்தும் ஒத்திகையிலும், மாணவர்கள் கலை நிகழ்ச்சி ஒத்திகையிலும் ஈடுபட்டனர்.

Exit mobile version