முப்படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி கோலாகலம்

ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தின விழாவை தொடர்ந்து முப்படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் குடியரசுத் தின விழாவில் பங்கேற்ற முப்படைகளும் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லி ராஜ்பாத்தில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று பார்வையிட்டனர். ராணுவ பேண்டு வாத்திய குழுவினரின் இசை நிகழ்ச்சியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

Exit mobile version