முன்னாள் மாணவர்கள் சார்பில் தொடக்கப்பள்ளிக்கு சீர்வரிசை

திருவண்ணாமலை அருகே முன்னாள் மாணவர்கள் சார்பில், சுமார் 3 லட்ச ரூபாய்க்கும் மேலான பொருட்கள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சீர்வரிசையாக வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை அடுத்த கல்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் பள்ளியின் வளர்ச்சிக்குத் தேவையான 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரொக்க நிதி மற்றும் பொருட்கள் சீர் வரிசையாக வழங்கப்பட்டன. பின்னர் பள்ளி மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Exit mobile version