தஞ்சையில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

தஞ்சை மாவட்டத்தில் மின் வினியோகத்தை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்களுக்கு, காவல்துறையினரும் உதவி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்த வந்த மின்துறை பணியாளர்கள், காவல்துறையினர் மூலம் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கம்பங்களை சரி செய்யும் பணியில், மின் ஊழியர்களுக்கு காவல்துறையினரும் உதவி வருகின்றனர்.

 

Exit mobile version