அதிமுக செய்தி தொடர்பாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

அதிமுக செய்தி தொடர்பாளர்கள், ஊடகங்களில் பேச விதிக்கப்பட்டிருந்த தடை, ஜூலை 1 முதல் விலக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

அதிமுக செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களில் பேட்டியளிக்க கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது இந்த உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை ஒன்றாம் தேதி முதல், செய்தி தொடர்பாளர்கள் தங்கள் வழக்கமான பணிகளை தொடர்வார்கள் என தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச்செல்வன் உட்பட 16 செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களில் பேசுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version