பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்: முதலமைச்சர்!

தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 19 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்களது குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு சாலை விபத்துகளிலும், நீரில் மூழ்கியும் 19 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், 19 நபர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ள முதலமைச்சர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 

Exit mobile version