புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண நிதி உதவி வழங்கப்படும் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண நிதி உதவி வழங்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். புயல் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்ட துணை முதலமைச்சர், பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் எனவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசு மிகுந்த கவனம் செலுத்தியால் சேதங்கள் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version