கோவை சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி

கோவையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 2 லட்சம் நிவாரண நிதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

கோவை டவுன் பகுதியைச் சேர்ந்த பைரோஜி பேகம் என்பவரின் குடும்பத்தினர் பாலக்காட்டுக்கு வேனில் சென்றபோது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினர். இதில் வேன் ஓட்டுநர் ஷாஜகான், பைரோஜி பேகம், ரியான், செல்வி ஷெரின், அப்னா பிர்ஜா, முகம்மது நிசார் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து 6 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 2 லட்சம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பலத்த காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரம்  லேசான காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version