ஆண்டு தோறும் மருத்துவமனை தினம் கொண்டாட அரசாணை வெளியீடு

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30 ஆம் தேதி “மருத்துவமனை தினம்” கொண்டாடப்படுவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவையில் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகளில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாள் மருத்துவமனை தினமாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த தினத்தன்று, மருத்துவமனை தினத்தைக் கொண்டாடலாம் என பரிந்துரைக்கப்பட்டது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், மருத்துவமனை தினம் கொண்டாட இருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை தினத்தைக் கொண்டாடத் தேவையான நிதியை நோயாளிகள் நல சமூக நிதி, முதல்வரின் சுகாதார காப்பீட்டுத் திட்ட நிதி, நன்கொடையாளர்கள் அளித்த நிதிகளில் இருந்து எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version