முட்டையிலிருந்து நல்லபாம்புகள் வெளியே வரும் தத்ரூப காட்சிகள் வெளியீடு!

சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நல்லபாம்பு முட்டைகளை பாதுகாத்து குட்டிகளை பொறிக்கச் செய்த வேளச்சேரி வனத்துறை அலுவலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். சென்னை, திருமுல்லைவாயிலில் தனியார் கார் நிறுத்தும் இடத்தில் பாம்புகளின் முட்டைகள் இருப்பதாக வேளச்சேரி வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அந்தப் பகுதியிலிருந்து 14 பாம்பு முட்டைகளில், நல்ல நிலையில் இருந்த 12 முட்டைகளை வனச்சரக அலுவலகத்துக்கு எடுத்துச்சென்று வனத்துறையினர் தகுந்த வெப்பநிலையில் பாதுகாத்தனர். இந்நிலையில் 12 முட்டைகளிலிருந்தும் நல்லபாம்புக் குட்டிகள் வெளியே வந்திருக்கிறது. இதன் தத்ரூப காட்சிகளை வனத்துறையினர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version