கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளை சந்திக்க அனுமதி கோரி பாட்டியாலா நீதிமன்றத்தில் உறவினர்கள் மனு

தேசிய விசாரணை முகமையால் கைது செய்யப்பட்டிருக்கும் பயங்கரவாதிகளை சந்திக்க அனுமதி கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அவர்களது உறவினர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

டெல்லி உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்துடன் செயல்பட்டுவந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகளை தேசிய விசாரணை முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், தேசிய விசாரணை முகமையால் கைது செய்யப்பட்டிருக்கும் நபர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அவர்களின் உறவினர்கள் சிலர் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர்.

Exit mobile version