சித்தராமையா மற்றும் குமாரசாமி மீது தேச துரோக வழக்கு பதிவு

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர்கள் சித்தராமையா மற்றும் குமாரசாமி மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது, பணி செய்ய விடாமல் இடையூறு செய்ததாக கூறி, கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர்கள் சித்தராமையா, குமாரசாமி ,முன்னாள் அமைச்சர்கள் பரமேஷ்வரா, சிவக்குமார் மற்றும் முன்னாள் காவல் ஆணையர் சுனில் குமார் ஆகியோர் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், ஐபிசி பிரிவு 20 களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version