மதுரையில் வட்டார போக்குவரத்து அலுவலக வாசலில் வைத்து கஞ்சா விற்பனை

மதுரையில் வட்டார போக்குவரத்து அலுவலக வாசலில் வைத்து கஞ்சா விற்பனை செய்த இளைஞரிடம் பல லட்ச ரூபாய் மதிப்புடைய கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுரை புதூர் பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் சந்தேகத்துக்குரிய வகையில் அலுவலக வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவனிடமிருந்து பல லட்ச ரூபாய் மதிப்புடைய 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து கஞ்சா விற்றவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Exit mobile version