ரூ.2000 வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. ஏழை எளிய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு அறிவித்திருக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க கோரி மதுரையை சேர்ந்த தினேஷ் பாபு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதே கோரிக்கையை வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் சுட்டிக் காட்டினார்.

இதையடுத்து, 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Exit mobile version