தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 13000 கனஅடியாக குறைப்பு

கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை குறைந்ததால் கேஆர்எஸ், கபினி அணைகளுக்கு வரக்கூடிய உபரி நீர் வரத்து குறைந்துள்ளது. இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அணைகளுக்கு வரக்கூடிய உபரி நீர் தமிழகத்துக்கு
சுமார் 11,000 கனஅடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக அணைகளில் இருந்து வரக்கூடிய உபரி நீரால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியிலிருந்து காலை நிலவரப்படி 13 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் வரத்தும் மேலும் படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 44 வது நாளாக அருவியில் குளிக்கவும், 16வது நாளாக பரிசல் இயக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சியாகவும் உள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கனஅடி நீரும் வெளியெற்றப்பட்டு வருகிறது.

Exit mobile version