திருப்பதி அருகே செம்மர கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

திருப்பதி அருகே செம்மர கடத்தலில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

லிபிரி –  ஸ்ரீவாரி மெட்டு சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் செம்மரங்கள் கடத்தப்படுவதாக செம்மர கடத்தல் தடுப்பு அதிரடிப்படை கூடுதல் கமாண்டர் ரவிசங்கருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து லிங்கேஸ்வர் மற்றும் வாசு தலைமையிலான காவல்துறை மற்றும் வனத்துறையினர் மேற்கொண்ட ரோந்து பணியின் போது வனப்பகுதி அருகே சிலர் செம்மரங்களை வெட்டிகொண்டிருந்தனர். காவல்துறையினரை கண்ட கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

இந்நிலையில் செம்மரங்களை காரில் கடத்த முயன்ற ராஜசேகர், குப்புசாமி என இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 75 செம்மரக்கட்டைகள், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Exit mobile version