குடியரசுத்தலைவர் மாளிகையில் அதிபர் டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வந்த அமெரிக்க அதிபர் டொனல்ட்டு டிரம்பை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி வரவேற்றனர்.

2 நாள் பயணமாக அதிபர் டொனல்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாக டிரம்ப் ஆகியோர் இந்தியா வந்துள்ளனர். இந்நிலையில், குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்ட்ரபதி பவனுக்கு வந்த டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி, ஆகியோர் டிரம்பை கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றனர்.  இதனையடுத்து அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டதை அடுத்து நடந்த ராணுவ மரியாதையில் இரு நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து நடந்த முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்டார். பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரிடம் அமெரிக்க பிரதிநிதிகளை அதிபர் டிரம்ப் அறிமுகம் செய்து வைத்தார்.

Exit mobile version