கொல்லம் அருகே மாயமான சிறுமி ஆற்றில் சடலமாக மீட்பு

கேரள மாநிலம் கொல்லம் அருகே மாயமான ஒன்றாம் வகுப்பு சிறுமி, ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

எளவூர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி தேவனந்தா அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வியாழக்கிழமை காலை விளையாட சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நீண்ட தேடுதலுக்கு பிறகு வீட்டின் அருகே உள்ள ஆற்றில் இருந்து சிறுமி தேவனந்தாவின் சடலம் மீட்கப்பட்டது. அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், உடலில் எந்த காயங்களும் இல்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வீட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆற்றுக்கு சிறுமி சென்றது ஏன் என கேள்வி எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version