9 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு

9 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலின் போது, வாக்குச் சீட்டுகளை மாற்றி வழங்கிய காரணங்களால், 9 வாக்குச் சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடலூர் மாவட்டத்தில் விலங்கல்பட்டு கிராம ஊராட்சியில் ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகர் ஊராட்சி ஒன்றியத்தில் 5 வாக்குச்சாவடிகளிலும், நாகை மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு வாக்குச்சாவடியிலும் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Exit mobile version