தமிழக அரசின் இலவச கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டத்திற்கு வரவேற்பு

தமிழக அரசின் இலவச கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. திருச்சுழி, காரியாபட்டி பகுதிகளில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றனர். ஆதரவற்ற முதியோர், விதவைகள், 2 பெண் குழந்தைகள் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. வாழ்வாதாரம் பெருக இந்த திட்டம் பெருதும் உதவியாக இருக்கும் என்று கிராம மக்கள் கூறியுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் அனைவருக்கும் கோழிக்குஞ்சுகள் வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version