கொரோனா மீண்டும் அதிகரிக்க என்ன காரணம்? – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

முகக்கவசம் அணியாததே, தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் அதிகரிக்க காரணம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளை பார்த்தால் மட்டும் முகக்கவசம் அணியாமல், பொது இடங்களில் மக்கள் எப்போதும் முகக்கவசம் அணிய வேண்டும் என கேட்டுக்கொண்டார். கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் சுய மருத்துவம் செய்து கொள்ளாமல் மருத்துவமனையை நாடவேண்டும் எனவும் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

Exit mobile version