திமுக தலைவர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய தயாரா ? – அன்புமணி ராமதாஸ் கேள்வி

வன்னியர் சொத்துகளை ராமதாஸ் அபகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின் குற்றச்சாட்டை நிரூபிக்க தவறினால் திமுக தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளர் ஏ.கே மூர்த்தியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். ஆற்காடு பேருந்து நிலையம், ராணிபேட்டை, சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார், கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், வன்னியர் சொத்துக்களை தாங்கள் அபகரித்துவிட்டதாக தெரிவித்துள்ள ஸ்டாலின் அவற்றை நிரூபிக்க தயாரா என கேள்வி எழுப்பினார். மேலும், குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை எனில் திமுக தலைவர் பதவியில் இருந்து விலகி கொள்ள ஸ்டாலின் தயாரா எனவும் சவால் விடுத்தார்.

Exit mobile version