நாடாளுமன்றம் விரும்பினால் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க தயார் : ராணுவ தளபதி

நாடாளுமன்றம் விரும்பினால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க தயாராக உள்ளதாக ராணுவ தளபதி முகுந்த் நராவனே உறுதி அளித்துள்ளார்.

ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நராவனே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒட்டுமொத்த காஷ்மீரும் இந்தியாவுக்கு சொந்தமானது என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாடாளுமன்றம் விரும்பும் பட்சத்தில், அது தொடர்பாக தங்களுக்கு அனுமதியளித்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார். ராணுவத்தின் நடவடிக்கை அனைத்தும் நாட்டு மக்களுக்காகவே இருக்கும் என்றும் இந்திய அரசியல் சாசனத்திற்கு  உட்பட்டு ராணுவம் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version