மேகேதாட்டு விவகாரத்தில் தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் -கர்நாடக முதல்வர் குமாரசாமி

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக  இருப்பதாக கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் மோடியை கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழகம் தான் அதிகப் பயனடையும் என்றார். இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்ததாக கூறிய குமாரசாமி, கர்நாடகா மற்றும் தமிழகம் ஒற்றுமையாக இருந்து தீர்வு காண வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். மேகேதாட்டு விவகாரத்தில் இருமாநிலங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்து குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் பேசியிருப்பதாகவும் குமாரசாமி கூறினார்.

Exit mobile version