"இந்தியாவுக்கு உதவ தயார்"- இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

கொரோனாவுக்கு எதிரான போரில், இந்தியாவின் நண்பனாவும், கூட்டாளியாகவும், இங்கிலாந்து பக்கபலமாக நிற்கும் என அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளதால், தினசரி தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியினை மத்திய மாநில அரசுகள் துரிதப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய அரசுக்கு பக்கபலமாக இங்கிலாந்து துணை நிற்கும் என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கடினமான சூழ்நிலையில், இந்திய அரசுடன் இணைந்து, இங்கிலாந்து அரசு தொடர்ந்து பணியாற்றும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதே போன்று, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நட்பு நாடுகளும்,கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version