"அனைத்து விவகாரங்களையும் திறந்த மனதுடன் விவாதிக்க தயார்"-பிரதமர்

நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்களையும் திறந்த மனதுடன் விவாதிக்க, மத்திய அரசு தயார் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பட்ஜெட் கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். 

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய பிரதமர், நாட்டின் வளர்ச்சிப் பாதையில் பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியம் என தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார முன்னேற்றம், தடுப்பூசி திட்டம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உள்ளிட்டவை உலக நாடுகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்றும், மத்திய பட்ஜெட் அறிக்கை உலகளாவிய அளவில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என்றும் பிரதமர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்களை திறந்த மனதுடன் விவாதிக்க மத்திய அரசு தயார் என்றும் பட்ஜெட் கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

நாட்டை பொருளாதார பாதையில் முன்னேற்ற இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் உகந்ததாக இருக்கும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version