ஆந்திர மாநிலத்தில் ஐந்து வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு

ஆந்திர மாநிலத்தில் ஐந்து வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநிலத்தில் கடந்த மாதம் 11ஆம் தேதி நடந்த சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் 5 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி நெல்லூர் மாவட்டத்தில் இரண்டு வாக்குச்சாவடிகளிலும், குண்டூர் மாவட்டத்தில் இரண்டு வாக்குச்சாவடிகளிலும் மற்றும் பிரகாசம் மாவட்டத்தில் ஒரு வாக்குச் சாவடியிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Exit mobile version