மீண்டும் ஆட்சி அமைக்கும் காங்கிரசின் கனவு பலிக்காது – மோடி

மீண்டும் ஆட்சி அமைக்கும் காங்கிரசின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அம்ரேலி நகரில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். குஜராத் மாநிலத்தில் கற்றுக் கொண்ட அரசியல் பாடங்களால் தான் பிரதமர் பதவியில் திறம்பட செயல்பட முடிந்தது என்றார்.கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்த தாக கூறிய மோடி, இன்னமும் அந்த கட்சிக்கு பதவி மோகம் விடவில்லை என்று குற்றம் சாட்டினார். இந்த தடவை மிக குறைவான இடங்களில் போட்டி போடும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைக்கும் கனவு பலிக்காது என்று பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார்.

Exit mobile version