சர்வாதிகார திமுகவிற்கு பாடம் புகட்டுவோம் – எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார்!

எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் அவர்கள் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு அவர்களுக்காக வாக்கும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அவர் செல்லும் இடமெங்கும் வரவேற்புகள் குவிந்தவண்ணம் உள்ளன. மக்கள் வரை புன்னகையுடன் வரவேற்கிறார்கள். இதனைத் தொடர்ந்து நமது நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு அவர் பிரத்யேகப் பேட்டியொன்றினை அளித்தார்.

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாசியோடு, மாண்புமிகு எதிர்கட்சித்தலைவர் முன்னாள் முதல்வர் விவசாயிகளின் காவலர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் பேராதரவோடு இந்த ஈரோடு இடைத்தேர்தலில் களம் காணும் எளியவர் மற்றும் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். தென்னரசு அவர்களுக்கு இரட்டைஇலைச் சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் இறங்கியுள்ளேன். இந்த இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றிபெறும் என்று எதிர்கட்சித் துணைத்தலைவர் பேசினார். தொடர்ந்து பேசிய அவர் புரட்சித் தலைவி அம்மா ஆட்சிகாலத்தில் பல திட்டங்களைக் கொண்டுவந்தார். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் போன்ற எத்தனையோ திட்டங்களை கொண்டுவந்தார். ஆனால் இந்த விடியாத திமுக ஆட்சியாளர்கள் இந்த திட்டங்களையெல்லாம் தொடர்ந்து செயல்படுத்தாமல் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளது என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தத் தேர்தலானது திமுகவிற்கு ஒரு பாடம் கற்பிக்கும் தேர்தலாக இருக்கும் . இதனை மக்களே எங்களிடம் தெரிவிக்கிறார்கள். களப்பணியாக நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் எங்களை சந்திக்கும் மக்கள் திமுகவின் அராஜகப் போக்கையும் அலட்சியப் போக்கையும் எங்களிடம் தெரிவிக்கிறார்கள் என்று எதிர்கட்சித் துணைத்தலைவர் பேசினார். இந்த சர்வாதிகார அரசினைக் தண்டிக்கும் வாய்ப்பு ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களுக்கு கிடைத்துள்ளது. திமுக தனது பணபலத்தையும், அதிகார பலத்தையும் மக்களிடையே காட்டி வருகிறது. ஆனால் நாங்கள் மக்கள் நலத்தையும் அவர்களுக்கான நியாயத்தையும் கழக இடைக்காலப் பொதுசெயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையில் பெற்றுத்தருவோம் என்று தொடர்ந்து பேசினார்.

Exit mobile version