சசிகலாவால் அதிமுகவை அசைக்க முடியாது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சசிகலாவுக்கு அதிமுகவில் ஒருபோதும் இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஏழு கோடி பேரிடம் சசிகலா தொலைபேசியில் பேசினாலும், அதிமுகவை அசைக்க முடியாது என உறுதிபட கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் அம்மா கோவில் வளாகத்தில், மதுரை மேற்கு மாவட்ட அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி நிர்வாகிகளுக்கு, கட்சிப்பணி குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமை ஏற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சசிகலாவுக்கு அதிமுகவில் ஒருபோதும் இடமில்லை என திட்டவட்டமாக கூறினார். 7 கோடி பேரில் எங்கோ ஒரு மூலையில் இருப்பவர்களிடம் பேசுவதன் மூலம் அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த நினைக்கும் சசிகலாவுக்கு பாடம் புகட்டும் வகையில், அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையோடு பணியாற்றி, அதிமுகவை மீண்டும் அரியணையில் ஏற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version