தயாநிதி மாறனின் பேச்சுக்கு ரவீந்திரநாத் குமார் எதிர்ப்பு

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க அதிமுக அரசு எடுத்து வரும் திட்டங்கள் தொடர்பான பட்டியலை, திமுகவுக்கு வழங்க தயார் என அதிமுக எம்பி, ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று பேசிய தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் குமார், தமிழக அரசை விமர்சித்து பேசிய திமுக எம்.பி. டி.ஆர் பாலுவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தமிழக அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை திமுக எம்.பி.க்கள் சுமத்தி வருவதாக ரவீந்திரநாத் குமார் கூறினார். பருவமழை பொய்த்துப் போனதால் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை போக்க அதிமுக அரசு பல்வேறு திட்டங்களையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அவர் விளக்கினார். தமிழக அரசின் திட்டங்கள் தொடர்பான பட்டியலை திமுகவுக்கு வழங்க தயாராக உள்ளதாக ரவீந்திரநாத் குமார் கூறினார்.

Exit mobile version