வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார்

தேனி மாவட்டத்தில், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆரத்தி எடுத்த பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தேனி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் ரவிந்திரநாத் குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுக கூட்டனி வேட்பாளர் வெளியூர் நபர் என்றும் இன்னொரு போட்டியாளர் ஆண்டிபட்டி மக்களுக்கும் அதிமுகவுக்கும் துரோகம் செய்தவர் என்று கூறிய அவர், தான் உங்கள் பிள்ளை எனவும் கூறினார்.

பிரசாரத்தின் போது அவருக்கு ஆரத்தி எடுத்தும், பொன்னாடை அணிவித்தும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் உள்பட நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Exit mobile version