தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும்: ரவீந்திரநாத் குமார்

தேனி தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் உறுதியளித்துள்ளார்.

தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் தொகுதி முழுவதும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் கோடாங்கிபட்டி பகுதியில் ஆயிரத்து எட்டு பூரண கும்ப ஆரத்தியுடன் பெண்கள் குலவையிட்டு வரவேற்றனர்.

அப்போது பேசிய அவர், அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் மதுரை போடி ரயில் சேவை மீண்டும் துவக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் தேனி மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து தருவதாகவும் உறுதியளித்தார். தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Exit mobile version