புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயிலின் ரத யாத்திரை கோலாகலமாக துவக்கம்

புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயிலின் ரத யாத்திரை கோலாகலமாக துவங்கியது.

ஒடிசா மாநிலம் பூரி ஜெகன்நாதர் கோயிலில் வருடாந்திர ரத யாத்திரை வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை இன்று துவங்கியது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்று துவங்கி 10 நாட்களுக்கு நடைபெறவுள்ள ரத யாத்திரையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரத யாத்திரையை முன்னிட்டு அங்குள்ள தேர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. ரத யாத்திரையையொட்டி பூரி நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version