மும்பை இளைஞரின் கண்டுபிடிப்பை பாராட்டிய ரத்தன் டாடா

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான டாடா-வில் பணிபுரிய வேண்டும் என்பது பலரது கனவாக இருந்து வருகிறது. இந்நிலையில் அதே கனவுடன் சுற்றி திரிந்த வாலிபர் ஒருவருக்கு ரத்தன் டாடாவே போன் செய்து தன்னுடைய உதவியாளராக பணி அமர்த்தியுள்ளார். அந்த இளைஞர் யார்?

தற்போது 27 வயதாகிய சாந்தனு, 2014-ஆம் ஆண்டு பட்டப் படிப்பு முடித்து டாடா குழுமத்தில் ஊழியராக இருந்துவந்தார். அவர் ஒருநாள் தெருநாய் ஒன்று வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடப்பதைப் பார்த்து பதறியுள்ளார். இந்த தெரு நாய்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என நினைத்த சாந்தனு, நாய்களின் கழுத்தில் ஒளி எதிரொளிப்பு பெல்ட் ஒன்று கட்ட வேண்டும் என்கிற யோசனை செய்தார். பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து தெரு நாய்கள் கழுத்தில் இந்த பெல்ட்டை கட்டி வந்தார் சாந்தனு. நண்பர்களுடன் சேர்ந்து யதார்த்தமாக இதனைத் தொடங்கிய அவரிடம் ஏகப்பட்ட ஆர்டர்கள் குவிந்தபோது, அவருக்கு தொழில் ரீதியான, பொருளாதார ரீதியான உதவி தேவைப்பட்டது. அதன் பின்னர் தனது தந்தையின் அறிவுரையின் பேரில் ரத்தன் டாடாவுக்கு நீண்ட தயக்கத்துக்கு பின் உதவி கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

அவரே எதிர்பாராத வகையில் சாந்தனுவுக்கு மறு கடிதம் எழுதியது மட்டுமல்லாது தன்னுடன் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, தனது நாய்களின் கழுத்திலும் அதே ஒளி எதிரொளிப்பு பெல்ட் இருப்பதைக் காட்டி நெகிழவைத்தார். அதன் பின்னர் பல்வேறு ஆலோசனைகளையும் சாந்தனுவுக்கு ரத்தன் வழங்கினார். பின்னர் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்று திரும்பியவுடன் சாந்தனுவுக்கு ரத்தன் டாடாவே போன் செய்து தனக்கு உதவியாளராக வர முடியுமா? என்று கேட்டு நியமித்துள்ளார்.இதுகுறித்து சந்தனு கூறுகையில் ஒரு நல்ல நண்பன், திறமையான வழிகாட்டி, சரியான பாஸ் என்ற 3 பேர் ஒரு இளைஞருக்கு அவசியம் என்றால், அந்த 3 பேராகவும் ரத்தன் டாடா ஒருவரே தனக்கு கிடைத்தது தன் பாக்கியம் என சாந்துனு நெகிழ்ந்துருகி பேசியுள்ளார். இதனை தொடர்ந்து சந்தனுவுக்கு சமூக ஆர்வாலர்கள் பலரும் தங்களது பராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version