நகைக்கடையில் இருந்து வைரத்தை திருடும் எலி

பீகாரில் நகைக்கடை ஒன்றில் இருந்து வைரத்தை கவருடன், எலி திருடிக்கொண்டு ஓடிய சுவாரஸ்ய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் போர்டிங் ரோடு என்ற பகுதியில் நவரத்தன் என்ற நகை கடை செயல்பட்டு வருகிறது. வியாபாரம் முடிந்தவுடன் வழக்கம்போல், நகைக்கடையை பூட்டிவிட்டு உரிமையாளர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் காலையில் வந்து கடையை திறந்து சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது, எலி ஒன்று கடையின் பணப்பெட்டி அருகே வைக்கப்பட்டிருந்த வைரக்கல்லை கவரோடு திருடி சென்ற சுவாரஸ்ய சம்பவம் பதிவாகியிருந்தது. இந்த வைரத்தின் மதிப்பு 25 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்று கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். சிவராத்திரியையொட்டி நடைபெற்ற இச்சம்பவம் இறைவனின் திருவிளையாடல் என்று கடை உரிமையாளர் கூறியது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version