ரன்வீர் ஷா, கிரண் ராவ்வின் பாஸ்போர்ட், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் ஒப்படைப்பு

தொழிலதிபர்களான ரன்வீர் ஷா மற்றும் கிரண்ராவ் ஆகியோரின் பாஸ்போர்ட் சென்னை கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர்களான ரன்வீர் ஷா மற்றும் கிரண்ராவ் ஆகியோர் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணையின்போது, அவர்களது பாஸ்போர்டை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ரன்வீர் ஷா மற்றும் கிரண்ராவ் ஆகியோர் தங்களது பாஸ்போர்டை ஒப்படைத்துள்ளனர். இருவர் மீதான ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

Exit mobile version