ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் வழக்கு தள்ளுபடி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான புகாரை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, நீதிமன்ற பெண் ஊழியர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டது. நீதிபதி பாப்டே தலைமையில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய குழு நடத்திய விசாரணையில், பெண் ஊழியர் அளித்த புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை  என கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Exit mobile version