சரமாரியாக கேள்வி எழுப்பிய பொதுமக்கள் – திணறிய திமுக நிர்வாகி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் திமுக ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரை, கொடைக்கல் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்விகள் கேட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

கொடைக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திமுகவை சேர்ந்த சோளிங்கர் ஒன்றியபெருந்தலைவர் கலைக்குமார் என்பவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதி மக்கள் அவரை முற்றுகையிட்டு, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.

மேலும், சீரான மின்சாரம் கிடைக்காமல் மிகுந்த சிரமப்பட்டு வருவதாகவும் சாலைகளை சீரமைக்கவில்லை எனவும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டை வைத்தனர். பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய திமுக ஒன்றிய பெருந்தலைவர் விரைவில் நிறைவேற்றி தருகிறேன் என கூறி அங்கிருந்து புறப்பட்டார்.

Exit mobile version